Posts

தஞ்சம்

தஞ்சம் ---------- உனை பற்றி பாட ஏதடி வார்த்தை பஞ்சம், அதற்காக தானே தமிழ் என்னிடம் அடைந்தது தஞ்சம்!

நிராகரிப்பு

நிராகரிப்பின் காரணம் கேட்டேன், நிர்பந்தம் என்றாய் ஒற்றை சொல்லில், சரிதான்,காதல் உனக்கு கூரை போலஎனக்கோ அதுஅஸ்திவாரம் போல.

T.Rajendar பாணியில் ஒரு காதல் கவிதை

உனை கண்டபோது முதல் முதலாய் என் நெஞ்சில் காதல் கடல் அலை யாய் நான் ஆனேன் கற்சிலையாய் பிறகு நான் இல்லை நிலையாய் என்றும் உன் நினைவாய் உனை தொடர்ந்தேன் நிழலாய் உடல் இளைத்தேன் துறும்பாய் என் காதல் சொன்னேன் ஒரு வழியாய் மலர்ந்தது உன் திருவாய் எனை கண்டு புன்னகைத்தாய் குறும்பாய் ஆலமரத்தின் அழகிய விழுதாய் காதல் வளர்த்தோம் மெல்ல வளர்பிறையாய் காலங்கள் கரைய மெழுகாய் வீட்டில் காதல் சொன்னோம் கனிவாய் அவர்கள் முகம் சு ளி க்க வெகுவாய் பிறகு யோசிக்க மெதுவாய் நாம் உறுகினோம் தீ பட்ட மெழுகாய் துடித்தோம் தீயில் விழுந்த புழுவாய் சம்மதம் தந்தனர் அமிழ்தாய் இதயம் ஆனது தேனில் விழுந்த பலாசுளையாய் என்றும் வாழ்வோம் வா நிறைவாய் …..

ஏமாற்றம்

என்னவ ளை கண் டு ஏமாந் த து வ ண் டு அவளை பூச் செ ண் டெ ன கொண் டு.....

மறுபிறவி

மறுபிற வி கிடைத்தா ல் எனக் கு புன்ன கை யா ய் பிறந் து மொழியாவே ன் உனக் கு.....

கவிதை

உன் விழியும் என் விரலும் சேர காலத்தால் அழியா காதல் சின்னங்களாய் பெற்றெடுத்த செல்வங்கள் .....

விலகல்.

விளக த்தான் விழைகின்றேன் விளக முடியாமல் விழுகிறேன் உன் விழியீர்ப்பு விசையில் விளக்கில் விழும் வி ட்டில் பூச்சியாய்

நீ மட்டும் வாசிக்க.....

இமைகளுக்கிடையில் இருந்து நீ எனை இம்சிக்க, உனை நான் சுவாசிக்க என் இதயக்குழியில் நீ வசிக்க, சூழ்நிலையோடு சூழ்ச்சியும் சூழ நம் காதல் கசக்க, உனக்கு தோழனானேன் நான் மனம் வலிக்க, உனையன்றி வேறு துணையில்லை என் துயர் உரைக்க, இடுகாட்டுக்கு இ ரை யாவேன் இரண்டு சொட்டு இறைத்திடு கண்ணீர் உன் இரங்கல் தெரிவிக்க, காதலே காதல் கொள்ளும டி நம் காதல் மீது தன் நிலை சிறக்க.....

விதி

உயிர்க்கொண்டு வாழும் நாள்வரை உன் துணைகொண்டு வாழ ஏங்கிணேன், விதித்ததென்னவோ மலர்கொண்டு வைக்கத்தான் உன் கல்லறையில் .....

கடவுளாக்குவோம்.....

விடையறியாமல் விசும்பு தடி விழிநீர் விதைத் து விலை மதிப்பற்ற காதல் விரைந் தோ டி வா விதியால் விதவையாகும் முன் விழுதாய் வளர்த்த நம் காதலை கடவுளாக்குவோம் நாம் கைகோர்த்து ......

***காதல் பரிசு***

எனை பிரிந்து வேறொருவனை நீ மனமுவந்ததாய் மணக்க , காதல் மருந்தெனக்கு உன் திருமண விருந்து.......

*** தொடரும் என் காதல்***

சம்மதம் எனக்கு மரணித்து மீண்டும் ஜனித்து அடக்கம்வரை நடக்க காதல் கைப்பிடித்து அவள் மழலையாய் .....

***தினம் ஒரு கவிதை***

அறியாதவளாய் கேட்கிறாய் தினம் ஒரு கவிதைக்கு காரணம் நாளுக்கொன்றாய் புது பரிணாமததில் தோன்றுவது நீயென்பதறியாமல்.....

அசைபோடுகிறேன்.....

அசைபோடுகிறேன் ..... இதயத்தை அபகரித்த நீயும் உனில் அகப்பட்ட நானும் நெஞ்சில் காதலை விதைத்த நாள் முதல் சிதைபட்ட நாள் வரை யிலான அ சையா ச் சொ த்தாம் நினைவுகளை உன் நினைவு எழ மௌனமாய் நெஞ்சுக்குள் நான் அழ இதயத்துள் உன் புன்னகை சொற்பொழிவு என் மூலாதாரமே , தராசு முள்ளாய் துடிக்கு தடி இதயம்