Monday, May 9, 2011
Thursday, March 4, 2010
நிராகரிப்பு
காரணம் கேட்டேன்,
நிர்பந்தம் என்றாய்
ஒற்றை சொல்லில்,
சரிதான்,காதல் உனக்கு
கூரை போலஎனக்கோ
அதுஅஸ்திவாரம் போல.
Wednesday, April 30, 2008
T.Rajendar பாணியில் ஒரு காதல் கவிதை
உனை கண்டபோது முதல் முதலாய்
என் நெஞ்சில் காதல் கடல் அலை யாய்
நான் ஆனேன் கற்சிலையாய்
பிறகு நான் இல்லை நிலையாய்
என்றும் உன் நினைவாய்
உனை தொடர்ந்தேன் நிழலாய்
உடல் இளைத்தேன் துறும்பாய்
என் காதல் சொன்னேன் ஒரு வழியாய்
மலர்ந்தது உன் திருவாய்
எனை கண்டு புன்னகைத்தாய் குறும்பாய்
ஆலமரத்தின் அழகிய விழுதாய்
காதல் வளர்த்தோம் மெல்ல வளர்பிறையாய்
காலங்கள் கரைய மெழுகாய்
வீட்டில் காதல் சொன்னோம் கனிவாய்
அவர்கள்
முகம் சுளிக்க வெகுவாய்
பிறகு யோசிக்க மெதுவாய்
நாம்
உறுகினோம் தீ பட்ட மெழுகாய்
துடித்தோம் தீயில் விழுந்த புழுவாய்
சம்மதம் தந்தனர் அமிழ்தாய்
இதயம் ஆனது தேனில் விழுந்த பலாசுளையாய்
என்றும் வாழ்வோம் வா நிறைவாய்…..
Sunday, January 6, 2008
Sunday, September 23, 2007
Wednesday, September 19, 2007
Tuesday, September 11, 2007
விலகல்.
விழைகின்றேன்
விளக முடியாமல்
விழுகிறேன் உன்
விழியீர்ப்பு
விசையில்
விளக்கில்
விழும்
விட்டில் பூச்சியாய்
நீ மட்டும் வாசிக்க.....
இம்சிக்க,
என்
நீ வசிக்க,
சூழ்ச்சியும்
சூழ
கசக்க,
துணையில்லை
என் துயர்
உரைக்க,
இரையாவேன்
இரண்டு சொட்டு
இறைத்திடு
கண்ணீர்
உன் இரங்கல்
தெரிவிக்க,
காதல்
கொள்ளுமடி
தன் நிலை
Sunday, September 9, 2007
விதி
வாழும் நாள்வரை
உன்
துணைகொண்டு
வாழ
ஏங்கிணேன்,
மலர்கொண்டு
வைக்கத்தான்
உன்
கல்லறையில்.....
Wednesday, June 6, 2007
கடவுளாக்குவோம்.....
விசும்புதடி
விழிநீர்
விதைத்து
விலைமதிப்பற்ற
காதல்
விரைந்தோடிவா
விதியால்
விதவையாகும் முன்
விழுதாய் வளர்த்த
கடவுளாக்குவோம்
நாம்
கைகோர்த்து......
***காதல் பரிசு***
பிரிந்து
வேறொருவனை
நீ
மனமுவந்ததாய்
மணக்க,
மருந்தெனக்கு
திருமண
விருந்து.......
Friday, May 4, 2007
*** தொடரும் என் காதல்***
மரணித்து
மீண்டும்
ஜனித்து
அடக்கம்வரை
நடக்க
காதல்
கைப்பிடித்து
அவள்
மழலையாய்.....
Wednesday, May 2, 2007
***தினம் ஒரு கவிதை***
அறியாதவளாய்
கேட்கிறாய்
தினம்
ஒரு
கவிதைக்கு
காரணம்
நாளுக்கொன்றாய்
புது
பரிணாமததில்
தோன்றுவது
நீயென்பதறியாமல்.....
Tuesday, April 24, 2007
அசைபோடுகிறேன்.....
நினைவு
எழ
மௌனமாய்
நெஞ்சுக்குள்
நான் அழ
இதயத்துள்
உன் புன்னகை
சொற்பொழிவு
துடிக்குதடி
Sunday, April 22, 2007
ஒரு மௌனத்தின் மொழிபெயர்ப்பு......
அருமை காதலியே
இதய வார்ப்பே
இயங்கு சக்தியே
காதல்
நினைவெனை கொல்ல
என் உருக்கத்தை
யாரிடம் சொல்ல
எனக்காக அல்ல
காதல் கொண்ட
துயர் தள்ள
மதம் கொண்ட
களிராய் மனம்
புரவியோட்டமாய்
பழைய நினைவுகள்
தழும்பாய் காலத்தின்
நிகழ்வுகள்
மரநிழலாய்
மலர எண்ணி
குடைநிழலாய்
குறுகினேன்.
என்
மௌனம் கலைத்த
கவியே
இன்றும்
தொடருது தாயே
ஒரு
மௌனத்தின் மொழிபெயர்ப்பு......
Tuesday, April 17, 2007
Monday, April 9, 2007
வாழ்க்கை எனும் ஓடையில்
வாராது சொந்தம்,
இறுதியில்
உடலேறிக்கும்
தீப்பந்தம்!
வாழ்வின் நிபந்தனை
காதலில் வீழாதே
சிரிப்பில் சீரழிந்து
அவள் நினைவில்
மதியிழந்து
கண்ணீரில் நீ நனைவாய்,
தனிமையே இனிமை
வாழ்வின் வளமை
காதல் கொண்டால்
கற்பனை கட்டவிழும்,
கானல் நீர் கண்டு
முகம் கழுவ எண்ணாதே,
எவரையும் நம்பாதே
உள்ளுணர்வு கேள்
உணர்வில் மென்மை
கடைபிடி,
மூளையை சாணை பிடி
வெற்றியை எட்டிப்பிடி
தேவைக்கு மீதம்
உடல்
மனதை துண்டாடும்
இன்பத்துக்கும்
துன்பத்தையும்
இயல்பே இன்பம்......
முன்மாதிரியாய் அல்ல
உன்மாதிரியாய் வாழ்
கருவரை, கல்லறை
Sunday, April 8, 2007
கவிதாஞ்சலி
ஏனடா இறைவா,
கைவிரல்களை
ஓடித்தாய்,
உடலில் பாய்ந்த
உதிரம் குடித்தாய்,
நட்பின்
பவித்திரம் சிதைத்தாய்,
மலரை
தீயிட்டு வதைத்தாய்,
செடிமேல்
அடைமழை பெய்தாய்,
அவள் மனம்
சுமந்த
கனவுகள் கோடி,
முடித்தாயே நீ
முகாரி பாடி,
உலகத்தில்
அவளோர் புள்ளி
ஏன் வைத்தாய்
அவளுக்கு கொள்ளி,
பிரித்தாயே என்
இரண்டாம் தாயை,
இனி என்
தோள்சாய நட்பேது,
விழிநீர்
துடைக்க விரலேது,
உயிர் தோழியே,
நட்பின்
கலியுக இலக்கணமே
இறக்க துடிக்கிறேன்
நானும் இக்கணமே,
காதலியை பிரிந்தாலும்
சுகித்திருப்பேன்,
தோழியை பிரித்தாய்
எப்படி சகித்திருப்பேன்,
என் துயர்
துடைப்பார் யாரடா,
இனி என்
வாழ்வே வீனடா,
மண்டியிடுகிறேன் இறைவா
நண்பர்களை பிரிக்காதே,
நீ வீசிய பாசக் கயிற்றால்
நட்பின் விழியில் விரிசல்....

