நெஞ்சை நெறுடுதடி

"உனை பிரிந்து இத்தனை
வருடங்கள் ஆனபின்னும்,


நெஞ்சத்தை
நெறுடுதடி
நெருஞ்சிமுள்ளாய்
நினைவுகள்,

இன்றும் உனக்காக
நான் விடும்,

ஒரு
பெரு மூச்சு,

இரண்டு சொட்டு
கண்ணீர்,

மும்மத கடவுளிடமும்
உனக்காய் வேண்டுதல்,

நான்கு திசைகளிலும்
உன் பிம்பங்களாக,

ஐந்து பூதங்களும்
எனக்கு நீயாக,

ஆறுகால பூஜை
செய்கிறேன் உனக்காக,

ஏழு ஜென்மங்கள்
எடுத்தாலும்,

எட்டு வருடங்கள்
நான்
காதலித்த உன்னை,

ஒன்பது கிரகங்கள்
தாண்டி
நீ இருந்தாலும்,

கிரகத்திர்க்கு ஒரு
அவதாரமாய் எடுத்து,

தசாவதாரத்தில்
சேர்வோம் நாம்"
.


Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை