*காதல் சுமைதாங்கி *
வருடங்கள்
விரைந்தும்
வதைக்குதடி
காதலை
சிதைத்த
பாவம்.....
என்
உணர்ச்சிகளின்
உன்னத
உருவகமே
உனை பிரிந்து
உயிர் கசிந்து
தன்னிலை இழந்து
மறுதலி
அன்று
உனை சுமந்த
இதயப்பாசறை
இன்று
உன்
நினைவுக்
கல்லறை
இதழோடு
புதைந்த
புன்னகை
வராமல்
வற்றிய
வார்த்தைகள்
அலமாரியில்
உயிர் சுமக்கும்
கவிதைகள்
உயிரை
இரண்டாக்கி
உறைந்த
உன் நினைவுகள்
கற்பூரமாய்
காலம் கரைந்தும்
கசக்கும் நிஜமாய்
இன்று நம்
காதலின்
நினைவாஞ்சலி
வாழ்வில் நீ
வந்துபோன
நினைவால்
வெந்துபோகும்
இதயம்
இன்பதுன்பமற்ற
இந்நிலை
விதி வைத்த
சூனியமோ
காதல் பரிசளித்த
மானியமோ
நானறியேன்
இறைவா
எழுது
அவள்
எனக்கென்று
மறுபிறவியிலேனும்....
பூத்திருப்பேன்
இமைமூடா
விழிகளுடன்
காதல்
சுமைதாங்கியாய்.......................
இப்படிக்கு
உதிர்ந்தவன்.....
Comments