இந்த கவிதை இறைவனடி சேர்ந்த எங்கள் தோழி கவிதாவுக்கு சமர்ப்பணம்....."" ஏனடா இறைவா , கைவிரல்களை ஓடித்தாய் , உடலில் பாய்ந்த உதிரம் குடித்தாய் , நட்பின் பவித்திரம் சிதைத்தாய் , மலரை தீயிட்டு வதைத்தாய் , செடிமேல் அடைமழை பெய்தாய் , அவள் மனம் சுமந்த கனவுகள் கோடி , முடித்தாயே நீ முகாரி பாடி , உலகத்தில் அவளோ ர் புள்ளி ஏன் வைத்தாய் அவளுக்கு கொ ள்ளி , பிரித்தாயே என் இரண்டாம் தாயை , இனி என் தோள்சாய நட்பேது , விழிநீர் துடைக்க விரலேது , உயிர் தோழியே , நட்பின் கலியுக இலக்கணமே இ ற க்க துடிக்கிறேன் நானும் இக்கணமே , காதலியை பிரிந்தாலும் சுகித்திருப்பேன் , தோழியை பிரித்தாய் எப்படி சகித்திருப்பேன் , என் துயர் துடைப்பார் யாரடா , இனி என் வாழ்வே வீனடா , மண்டியிடுகிறேன் இறைவா நண்பர்களை பிரிக்காதே , நீ வீசிய பாசக் கயிற்றால் நட்பின் விழியில் விரிசல் ....