வாழ்க்கை எனும் ஓடையில்
ஆதி முதல் அந்தம்
ஆதாயமின்றி
வாராது சொந்தம்,
வாராது சொந்தம்,
அதனினும் மேலடா
இறுதியில்
உடலேறிக்கும்
தீப்பந்தம்!
இறுதியில்
உடலேறிக்கும்
தீப்பந்தம்!
பெரியோர் போதனை
வாழ்வின் நிபந்தனை
வாழ்வின் நிபந்தனை
சூழ்நிலையை சூழ்ந்துகொள்
சந்தர்ப்ப நிர்ப்பந்தம் அறி,
பரிகாசம் செய்தவனுக்கு
ஒரு இதிகாசமாய் இரு,
காதலில் வீழாதே
சிரிப்பில் சீரழிந்து
சிந்தை சிறகொடிந்து
அவள் நினைவில்
மதியிழந்து
கண்ணீரில் நீ நனைவாய்,
தனிமையே இனிமை
வாழ்வின் வளமை
காதல் கொண்டால்
கற்பனை கட்டவிழும்,
கானல் நீர் கண்டு
முகம் கழுவ எண்ணாதே,
அவள் நினைவில்
மதியிழந்து
கண்ணீரில் நீ நனைவாய்,
தனிமையே இனிமை
வாழ்வின் வளமை
காதல் கொண்டால்
கற்பனை கட்டவிழும்,
கானல் நீர் கண்டு
முகம் கழுவ எண்ணாதே,
காதல் என்பதோர்
மணல்வீடு
அதனிடம்
ஏந்தாதே திருவோடு,
எவரையும் நம்பாதே
உன்னை நேசி,
உள்ளுணர்வு கேள்
உணர்வில் மென்மை
உள்ளுணர்வு கேள்
உணர்வில் மென்மை
உள்ளத்தில் உண்மை
கடைபிடி,
மூளையை சாணை பிடி
வெற்றியை எட்டிப்பிடி
கடைபிடி,
மூளையை சாணை பிடி
வெற்றியை எட்டிப்பிடி
பாவை மீது ஆசை வீடு
தேவைக்கு மீதம்
தேவைக்கு மீதம்
அள்ளிக்கொடு,
உடல்
சதை போர்த்திய ஓடு
மனிதன் ஆறறிவு
கொண்ட ஆடு,
ஆசை வந்தாடும்
மனதை துண்டாடும்
மனதை துண்டாடும்
கடந்த கால தவறு
வாருங்கால
துயரின் திறவுகோல்
பெருமைக்கு
கொள்ளியிடு
பொறுமையின்
எல்லை தொடு,
இன்பத்துக்கும்
இடைவெளி விடு
துன்பத்தையும்
துன்பத்தையும்
தடவிக் கொடு
இயல்பே இன்பம்......
இயல்பே இன்பம்......
இன்பதுன்பமற்ற
நிலை எய்து.....
முன்மாதிரியாய் அல்ல
உன்மாதிரியாய் வாழ்
முன்மாதிரியாய் அல்ல
உன்மாதிரியாய் வாழ்
நிம்மதி நிறைந்தவை
கருவரை, கல்லறை
கருவரை, கல்லறை
இடுகாட்டுக்கு
மட்டும் இறையாகு.....
Comments