நீ மட்டும் வாசிக்க.....

இமைகளுக்கிடையில்
இருந்து
நீ
எனை
இம்சிக்க,

உனை
நான்
சுவாசிக்க
என்
இதயக்குழியில்
நீ வசிக்க,


சூழ்நிலையோடு
சூழ்ச்சியும்
சூழ
நம் காதல்
கசக்க,


உனக்கு
தோழனானேன் நான்
மனம்
வலிக்க,


உனையன்றி வேறு
துணையில்லை
என் துயர்
உரைக்க,


இடுகாட்டுக்கு
ரையாவேன்
இரண்டு சொட்டு
இறைத்திடு
கண்ணீர்
உன் இரங்கல்
தெரிவிக்க,


காதலே
காதல்
கொள்ளுமடி
நம் காதல் மீது
தன் நிலை
சிறக்க.....

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை