Wednesday, January 10, 2007

Sammadham dhanadi


Kaathiruppu

உனக்காய்
கால் கடுக்க
காத்திருந்து,
வந்தபின் சினம் கொண்டு,
திட்ட முற்பட,

தலை தாழ்த்தி,
இமை உயர்த்தி

"என்னடா செல்லம் கோவமா"
என்பாயே,
அந்த சிரிப்பில்
சிதையுதடி
என் சினமெல்லாம்.

"காதல் போயின் சாதல்"

என் மீதான

உன் காதலை

நீ உரைத்த விதம்,


நான் திரி,

நீ மெழுகு

நான் எரிய

நீ உருக,


வாழ்வோம் என்றாயே,

இதுவன்றோ

"காதல் போயின் சாதல்."

காத்திருப்பு......

ஜென்மங்கள் ஆனாலும்
எனக்காக
காத்திருப்பாயா
என்றாய்
அன்று,

அதன் பொருள்
அறிந்தேன்
உன்
திருமண அழைப்பிதழ்
தந்தபோது
இன்று.