Posts

Showing posts from April 9, 2007

வாழ்க்கை எனும் ஓடையில்

ஆதி முதல் அந்தம் ஆதாய மின்றி வாராது சொந்தம், அதனினும் மே ல டா இறுதியில் உடலேறிக்கும் தீப் பந்தம்! பெரியோர் போதனை வாழ்வின் நிபந்தனை சூழ்நிலையை சூழ்ந் து கொள் சந்தர்ப்ப நிர்ப்பந்தம் அறி , பரிகாசம் செய்தவனுக்கு ஒரு இதிகாசமாய் இரு , காதலில் வீழாதே சிரிப்பில் சீரழிந்து சிந்தை சிறகொடிந்து அவள் நினைவில் மதியிழந்து கண்ணீரில் நீ நனைவாய், தனிமையே இனிமை வாழ்வின் வளமை காதல் கொண்டால் கற்பனை கட்டவிழும், கானல் நீர் கண்டு முகம் கழுவ எண்ணாதே, காதல் என்பதோர் மண ல் வீடு அதனிடம் ஏ ந் தாதே திரு வோ டு, எவரையும் நம்பாதே உன்னை நேசி, உள்ளுணர்வு கேள் உணர்வில் மெ ன்மை உள்ளத்தில் உண்மை கடைபிடி, மூளையை சாணை பிடி வெற்றியை எட்டிப்பிடி பாவை மீது ஆசை வீடு தேவைக்கு மீதம் அள்ளிக்கொடு, உடல் சதை போர்த்திய ஓடு மனிதன் ஆறறி வு கொண்ட ஆடு, ஆசை வந்தாடும் மனதை துண்டாடும் கடந்த கால தவறு வாருங்கால துயரின் திறவுகோல் பெருமைக்கு கொ ள் ளியிடு பொறுமையின் எல்லை தொ டு, இன்பத்து க்கும் இடைவெளி வி டு துன்பத்தையும் தடவி க் ...

கவிதாஞ்சலி

இந்த கவிதை இறைவனடி சேர்ந்த எங்கள் தோழி கவிதாவுக்கு சமர்ப்பணம்....."" ஏனடா இறைவா , கைவிரல்களை ஓடித்தாய் , உடலில் பாய்ந்த உதிரம் குடித்தாய் , நட்பின் பவித்திரம் சிதைத்தாய் , மலரை தீயிட்டு வதைத்தாய் , செடிமேல் அடைமழை பெய்தாய் , அவள் மனம் சுமந்த கனவுகள் கோடி , முடித்தாயே நீ முகாரி பாடி , உலகத்தில் அவளோ ர் புள்ளி ஏன் வைத்தாய் அவளுக்கு கொ ள்ளி , பிரித்தாயே என் இரண்டாம் தாயை , இனி என் தோள்சாய நட்பேது , விழிநீர் துடைக்க விரலேது , உயிர் தோழியே , நட்பின் கலியுக இலக்கணமே இ ற க்க துடிக்கிறேன் நானும் இக்கணமே , காதலியை பிரிந்தாலும் சுகித்திருப்பேன் , தோழியை பிரித்தாய் எப்படி சகித்திருப்பேன் , என் துயர் துடைப்பார் யாரடா , இனி என் வாழ்வே வீனடா , மண்டியிடுகிறேன் இறைவா நண்பர்களை பிரிக்காதே , நீ வீசிய பாசக் கயிற்றால் நட்பின் விழியில் விரிசல் ....