Posts

Showing posts from April 30, 2008

T.Rajendar பாணியில் ஒரு காதல் கவிதை

உனை கண்டபோது முதல் முதலாய் என் நெஞ்சில் காதல் கடல் அலை யாய் நான் ஆனேன் கற்சிலையாய் பிறகு நான் இல்லை நிலையாய் என்றும் உன் நினைவாய் உனை தொடர்ந்தேன் நிழலாய் உடல் இளைத்தேன் துறும்பாய் என் காதல் சொன்னேன் ஒரு வழியாய் மலர்ந்தது உன் திருவாய் எனை கண்டு புன்னகைத்தாய் குறும்பாய் ஆலமரத்தின் அழகிய விழுதாய் காதல் வளர்த்தோம் மெல்ல வளர்பிறையாய் காலங்கள் கரைய மெழுகாய் வீட்டில் காதல் சொன்னோம் கனிவாய் அவர்கள் முகம் சு ளி க்க வெகுவாய் பிறகு யோசிக்க மெதுவாய் நாம் உறுகினோம் தீ பட்ட மெழுகாய் துடித்தோம் தீயில் விழுந்த புழுவாய் சம்மதம் தந்தனர் அமிழ்தாய் இதயம் ஆனது தேனில் விழுந்த பலாசுளையாய் என்றும் வாழ்வோம் வா நிறைவாய் …..